டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்

Estimated read time 1 min read

நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
உள்ளூர் சட்ட அமலாக்கப் படை மற்றும் தேசிய காவல்படை உள்ளிட்ட அவசரகால குழுக்கள் குறைந்தது 85 விரைவான நீர் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
மீட்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வீடுகளிலோ அல்லது வாகனங்களிலோ சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் நியூ மெக்ஸிகோ உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த டேனியல் சில்வா கூறுகையில், தண்ணீர் வடிந்த பிறகு தான் சேதம் குறித்து எதுவும் தெரியவரும்.

You May Also Like

More From Author