கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள புதரிக்கண்டம் மைதானத்தில் பூத் அளவிலான கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆட்சியில் கேரள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இந்தக் கட்சிகளின் ஆட்சி மக்களுக்கு பயனளிக்கவில்லை என விமர்சித்தார். கேரளாவில் ஊழல், மோசமான நிர்வாகம், மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியது போன்றவற்றை எடுத்துக்காட்டி, பாஜகவின் மாற்று ஆட்சி மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி விவரித்த அவர், இவை கேரளாவிலும் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கேரளாவில் வலுவான மாற்றாக உருவாகும் எனவும், 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு மீது மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளதாகவும், ஊழல், குடும்ப அரசியல், மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “எங்கள் கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய அளவிலும், எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் மாநில அளவிலும் மக்களின் ஆதரவைப் பெறும்,” என்று கூறினார். இந்தக் கூட்டணி எவ்வித நிபந்தனைகளும் இன்றி உருவாக்கப்பட்டதாகவும், அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ தான். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான், ஆட்சியிலும் பங்கேற்கும். திமுக மீது அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். நிச்சயம் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிப் பெறும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. [மேலும்…]
அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
ஆப்பிரிக்கக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்வது, உங்கள் எண்ணங்களை மாற்றும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இது உங்களுக்குப் புதுப்புது பார்வைகளையும், நல்ல புரிதலையும் கொடுக்கும். [மேலும்…]
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) [மேலும்…]