செப்டம்பருக்குள் இந்தியா – அமெரிக்கா இடைக்கால தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால தாராராள வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, சமீபத்தில் இந்திய அதிகாரிகள் வாஷிங்டனில் இருந்து திரும்பியுள்ளனர்.
அமெரிக்கா விதித்த ஆகஸ்ட் 1 வரி காலக்கெடுவிற்கு முன்னர் இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக வேலை செய்யும் நிலையில், ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒரு அமெரிக்க பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

You May Also Like

More From Author