ஆபரேஷன் மஹாதேவில் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள்: உள்துறை அமைச்சர்  

Estimated read time 1 min read

நேற்று இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் மஹாதேவில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும், பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடுமையான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பங்கேற்ற அமித்ஷா, பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் சாக்லேட்டுகள் பாகிஸ்தானுடனான அவர்களின் தொடர்பை நிரூபித்ததாகக் கூறினார்.
“பைசரன் பள்ளத்தாக்கில் மதம் குறித்து விசாரித்ததன் மூலம் அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர்… கூட்டு நடவடிக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜே & கே போலீசார் வீழ்த்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.

You May Also Like

More From Author