டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு – காவல் நிலையத்தில் புகார்.!

Estimated read time 1 min read

சென்னை : டெல்லியில், நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் அடையாளம் தெரியாத நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்ட அவரிடம் இருந்து 4 சவரன் செயினை பறித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாணக்யபுரி போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் உயர் பாதுகாப்பு பகுதியில் நடந்ததால், டெல்லியில் சட்டம் ஒழுங்கு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி. சுதாவின் அதிகாரப்பூர்வ கருத்து அல்லது விரிவான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. காவல்துறையின் விசாரணை முடிவுகள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author