ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் வரும் 25-ம் தேதி பிரசித்திபெற்ற பொங்காலை விழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 17-ம் தேதி சனிக்கிழமை அன்று  பகவதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்துதலுடன் விழா தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டார அடுப்பில் தீ மூட்டுதலுடன், பொங்காலை விழா தொடங்குகிறது. மதியம் உச்சி பூஜையும், பொங்காலை நிவேத்யம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு குத்தியோட்டம், சூரன்குத்து, அம்மன் எழுந்தருளல்  நடைபெறுகிறது.

பிப்ரவரி 26-ம் தேதி 10-ம் நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவு அம்மனுக்குக் காப்பு அவிழ்த்து குடி இறக்குதல் நிகழும். அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

இந்த தகவலை ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை கமிட்டி நிர்வாகி சித்ரலேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற பொங்காலை விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது புதிய கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author