அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் பாதுகாப்பு சூழலும் வேகமாக மாறிவரும் வேளையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் [மேலும்…]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு [மேலும்…]
வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) காலி பணி இடங்கள்: 11,403 [மேலும்…]
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபாட்டில்கள் விற்பனை [மேலும்…]
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற [மேலும்…]
* இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் [மேலும்…]
இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால [மேலும்…]