பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர்  

Estimated read time 0 min read

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராமர் பிறந்த இடம் குறித்த அவரது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடே தனது அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நேபாள ராணுவத்தின் சிவாபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர், தனது கட்சிக்கு எழுதிய கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்தவை என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை ஒலி மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், ராமர் அயோத்தியில் அல்ல, நேபாளத்தில்தான் பிறந்தார் என்ற தனது சர்ச்சைக்குரிய கூற்றிலும் அவர் உறுதியாக நின்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author