ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் பக்கம்..!!! 

Estimated read time 1 min read

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் , ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் இதுகுறித்து தெரிவித்ததாவது, “செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்தபோது, எங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதனால் தான் நாங்கள் ஓபிஎஸ் அணியைத் தேடினோம்” என கூறினார்.

“தற்போது செங்கோட்டையன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நேர்மையான தலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அணி திரும்பி இணைதல், அதிமுகவில் EPS-க்கு மீண்டும் பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதில், மீண்டும் ஒருங்கிணைப்பு ஏற்படுமா என்பது பற்றி கட்சி மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author