தமிழ்நாட்டில் அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Grama Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாவட்டம் வாரியான காலிப் பணியிட விவரங்களை விண்ணப்பதாரர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியுடைய நபர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 9, 2025 ஆகும்.
1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு
