26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளுடன் அயோத்தி புதிய உலக சாதனை  

Estimated read time 0 min read

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது தீப உற்சவத்தில், சரயு நதிக்கரையில் உள்ள 56 கட்டங்களிலும் 26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, அயோத்தி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சி, கின்னஸ் உலக சாதனைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், அயோத்தியின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகறியச் செய்தது.
விழாவின் ஒரு பகுதியாக, முதல்வர் ஆதித்யநாத் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் வேடமிட்ட கலைஞர்களுக்கு ஆரத்தி செய்து, ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் புஷ்பக விமான இரதத்தை இழுத்தார்.
ஐந்து நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு ராமலீலா நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author