இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஐந்து நாட்களுக்குள் அவர் மேற்கு வங்காளத்திற்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் பகுதிக்கான மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவாகும்.
கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோவின் 4.8 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதை ரூ.4,965 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையமான இது, ஹவுராவின் தரை மட்டத்திலிருந்து 30 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author