துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
போர்ச் சூழலுக்கும் அரசியல் விவகாரங்களுக்கும் அப்பாற்பட்ட அந்தப் பெண் தனது அறைக்குள் பாதுகாப்பாக இருந்தபடி பின்தொடர்பாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு ஏவுகணை அவர் இருந்த கட்டிடத்தின் மீது நேரடியாக வந்து மோதியது.
दुबई में एक महिला अपने रूम में बैठकर लाइव स्ट्रीमिंग कर रही थी।
तभी एक ईरानी मिसाइल उसी बिल्डिंग से जा टकराई जिसमें वो थी — जिससे उसकी मौत हो गई।
यह युद्ध बहुत से मासूमों की जान ले रहा है।#Iran #IranWar #Israel pic.twitter.com/FDeF7XWmmJ
— Dr. Sheetal yadav (@Sheetal2242) March 2, 2026
இந்த பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தில் கட்டிடம் பலத்த சேதமடைந்த நிலையில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவரின் இறுதி மூச்சு அடங்கும் காட்சிகள் இவ்வாறு நேரலையில் கேமராவில் பதிவானது காண்போரின் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.
எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் போரினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது குறித்து சமூக ஆர்வலர்கள் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
