பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.
இது குறித்து பீகார் மக்களுக்கு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த வாக்காளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
10 வது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியானது
