போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர் 

ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காசா மற்றும் எகிப்திய எல்லையில் உள்ள நகரமான ரஃபாவில் ஒரு பெரிய இராணுவ தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் அச்சுறுத்தியதால், இந்த இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலால், காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் ரஃபாவைச் சுற்றி தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அந்த நகரத்தை சுற்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக மோசமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author