காமராஜர் பாணியை கையில் எடுத்து அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியல் களம் தற்பொழுது பலமுனைப் போட்டிகளால் சூடுபிடித்துள்ள வேளையில், அண்ணாமலை தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மிக முக்கியமானதொரு வரலாற்று ஒப்பீட்டை முன்வைத்துள்ளார்.

‘தமிழக அரசியலில் தற்பொழுது அசுர பலத்துடன் ஒரு புதிய ஆற்றல் மிக வீரியமாக உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்று அதிரடியாகத் தெரிவித்துள்ள அவர், கட்சியின் வளர்ச்சிக்காக 1963-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் தனது பதவியைத் துறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், உண்மையான அரசியல் மாற்றம் என்பது வெற்று அரசியல் மேடைகளில் அரங்கேறுவது அல்ல, அது மக்களை நேரடியாகச் சந்திப்பதில் இருந்தே தொடங்குகிறது என்று காமராஜர் அன்றே கூறியதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் களம் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலின் புதிய சக்தியைப் பறைசாற்றும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்களில் தற்பொழுது உற்றுநோக்கப்படும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.”

Please follow and like us:

You May Also Like

More From Author