ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வசந்தம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் நட்பாக பழகி வந்த மூதாட்டி சிவகாமி, அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
பின்னர் காலையில் எழுந்து மூதாட்டி வசந்தம் பார்த்தபோது, 18 சவரன் நகைகள் திருடு போனதுடன், மூதாட்டி சிவகாமியும் மாயமாகி உள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் சிவகாமியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.