திடீர் திருப்பம்.. ‘அறிவித்தார் கூட்டணியை” தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!! 

Estimated read time 0 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வில், அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து சபதம் எடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்பதே இவர்களது இலக்கு என்று அறிவித்துள்ளனர். இந்த மூன்று தலைவர்களின் ஒருங்கிணைந்த வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், விரைவில் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். “துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் மூவரும் ஒன்றாக இணைந்துள்ளோம்” என்று அவர் பகிரங்கமாகக் கூறினார்.

மேலும், சசிகலா குறித்துப் பேசிய அவர், “சசிகலா எப்போதும் எங்களுடன் தான் இருப்பார். காலதாமதத்தால் எங்களோடு சேர்ந்து அவரால் இங்கு வர முடியவில்லை” என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, சமூகநீதி மற்றும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் நோக்கிலேயே இந்த ஒன்று சேரல் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author