2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்னிய நேரடி முதலீடுகளை (FDIs) அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகள் மற்றும் அங்கீகாரம் அவற்றின் வரவை எளிதாக்கும் வகையில் நெறிப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.