உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்  

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் 84 வீரர்கள் பாரிஸ் சென்றுள்ளனர்.

You May Also Like

More From Author