இந்தியா அவுட் கொள்கையை நிராகரித்த முகமது முய்சு  

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு, இந்தியா அவுட் கொள்கை தொடர்பான கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் டீன் தலைமைத்துவ தொடரில் பேசிய அவர், மாலத்தீவு எந்த ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கும் எதிராக இருந்ததில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு குறித்த கவலைகளையும் அவர் குறிப்பிட்டு, நாட்டில் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக உள்ளன.

பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அங்கிருந்த 90 இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுமாறு முய்சு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார்.

You May Also Like

More From Author