அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என கணிப்பு  

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்துள்ளார்.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் வருமானம் குறைந்தபட்சம் $2,000 உயரும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (IEG) ஏற்பாடு செய்து, நிதி அமைச்சகத்தால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட கௌடில்ய பொருளாதார மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் போது இதை தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது 2,730 டாலர் தனிநபர் வருமானத்தை எட்ட 75 ஆண்டுகள் ஆனது என்று கூறிய நிர்மலா சீதாராமன், வலுவான முதலீடுகள், வலுவான அடிப்படைகள் மற்றும் நிலையான கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக அடுத்த அதிகரிப்பு மிக வேகமாக நிகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

You May Also Like

More From Author