குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதைப் பெற்றார் ஏஆர் ரஹ்மான்  

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருதைப் பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் செவ்வாயன்று (அக்டோபர் 8) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதை வென்றார்.
இது அவருக்கு ஏழாவது தேசிய திரைப்பட விருதாகும். டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏஆர் ரஹ்மானுக்கு மதிப்புமிக்க விருதை வழங்கினார்.
விருதைப் பெற்றதும், ரஹ்மான் ஏஎன்ஐ உடனான ஒரு நேர்காணலில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் மணிரத்னத்துடன் பணிபுரியும் ஒவ்வொரு முறையும் சிறந்ததை வெளிப்படுத்துவது சிறப்பு என்று கூறினார்.

You May Also Like

More From Author