கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  

Estimated read time 0 min read

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஏழாவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். பீகார் இந்த விளையாட்டு நிகழ்வை முதன்முறையாக நடத்துகிறது.
பாட்னாவில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தனது உரையில், இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு கலாச்சாரத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, நாட்டின் மென்மையான சக்தியை மேம்படுத்துவதில் அதன் பங்கை வலியுறுத்தினார்.
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சமீபத்திய ஐபிஎல் செயல்திறன், நிலையான பங்கேற்பு எவ்வாறு சிறப்பை உருவாக்குகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author