ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா படைகளை திரும்ப பெற்றார் டிரம்ப்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால், அமெரிக்க பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக புதன்கிழமை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அமெரிக்கா தனது ஈராக்கிய தூதரகத்தை பகுதியளவு காலி செய்யத் தயாராகி வருவதாகவும், மத்திய கிழக்கில் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால், அங்குள்ள இராணுவத்தைச் சார்ந்திருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டது.
எனினும், இந்த முடிவைத் தூண்டிய பாதுகாப்பு அபாயங்கள் என்ன என்பதை அமெரிக்க மற்றும் ஈராக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.
மேலும் வெளியேற்றம் குறித்த அறிக்கைகள் எண்ணெய் விலைகளை 4 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தின.

You May Also Like

More From Author