சிங்கப்பூர் தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கிற்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,

சீன-சிங்கபூர் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் நவீன கட்டுமானத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும், இது பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. சீனாவின் வளர்ச்சியில் சிங்கபூர் மேலும் ஆழமாக ஒருங்கிணைந்து வருவதை சீனா வரவேற்கிறது என்றார்.

சீன-சிங்கப்பூர் நட்புறவு தலைமுறையாக வளர்ந்து வருகிறது. சிங்கப்பூரின் முன்னாள் தலைவர்கள் சீனா மீதான உறவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரே சீனா எனும் கொள்கையில் சிங்கபூர் ஊன்றி நின்று, தைவான் பிரிவினைவாத சக்தியை எதிர்த்து வருவதாக லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author