ரஷ்யாவில் பெண் பத்திரிகையாளர் மரணம்

ரஷ்யாவில் கொம்சோமோல்ஸ்கயா பிரவ்தா பத்திரிகையின் துணை தலைமையாசிரியர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அன்னா சரேவாயே (35) மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். கொம்சோமோல்ஸ்கயா பிராவ்தா என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு செய்தித்தாள். டிசம்பர் 10ம் தேதி முதல் அன்னா பற்றி எந்த தகவலும் இல்லை. தந்தை விசாரணைக்கு சென்று, மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் இறந்த உடலைக் கண்டார். ஒரு வருடத்திற்கு முன்பு, அன்னாவின் முதலாளியும், கொம்சோமோல்ஸ்கயா பிராவ்டாவின் தலைமை ஆசிரியருமான விளாடிமிர் சுங்கோர்கின் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். சுங்கோர்கின் ரஷ்ய அதிபரின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்.

You May Also Like

More From Author