மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வி  

Estimated read time 0 min read

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்திய கிரிக்கெட் அணி தனது நான்காவது தொடர் தோல்வியை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இங்கிலாந்திடம் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது.
இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, ஒரு வார கால ஓய்விற்குப் பின் களமிறங்கிய இந்திய அணி, தனது உத்திகளைச் சீரமைக்கத் தவறிவிட்டது.
இதனால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக,
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, கேப்டன் ஹெதர் நைட்டின் சிறப்பான சதம் மற்றும் ஏமி ஜோன்ஸின் அரை சதத்தின் உதவியுடன் 288 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author