ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
இத்திட்டத்திற்காக 18 ஆயிரத்து 123 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 1 கோடி 86 லட்சம் மக்கள் பயன்பெறுவர். கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
