ஆசிய-பசிபிக் ஊடகத்திற்கான உயர் நிலைக் கருத்தரங்கு செப்டம்பர் 5ஆம் நாள், குவாங்தொங் மாநிலத்தின் ஷென்சென் நகரில் துவங்க உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்திய கூட்டுச் செழுமையைக் கட்டியமைப்பதற்கான ஊடகங்களின் ஒத்தக் கருத்துக்கள் மற்றும் செயல்கள் என்பது இதன் தலைப்பாகும். இதில் பல சாதனைகள் காணப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள விருந்தினர்கள் தற்போது, சீனாவின் குவாங்சோ, ஃபோஷான் தோங்குவான், ஷென்சென், சூஹாய், சோங்ஸஷான் முதலிய இடங்களில் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்
