நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 

மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார்.

மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.
ஜமீரின் வருகையை அறிவித்த வெளிவிவகார அமைச்சகம், இந்த பயணம் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மாலத்தீவில் மூன்று ராணுவ தளங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று முய்சு வலியுறுத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கடுமையான சிதைந்தன.

இந்தியா ஏற்கனவே தனது பெரும்பாலான ராணுவ வீரர்களை மாலைதீவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.

You May Also Like

More From Author