கனமழை எச்சரிக்கை : திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு..அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

Estimated read time 1 min read

சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 18-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்திருந்தது.

குறிப்பாக, டிசம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author