இங்கிலாந்தை பந்தாடியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  

Estimated read time 1 min read

சனிக்கிழமை (ஜூன் 28) அன்று இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஹெடிங்லியில் சமீபத்தில் ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் தோல்வியைப் பெற்று ஏமாற்றத்தை அளித்த நிலையில், இந்த உறுதியான வெற்றி இந்திய ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்தது.
அணியின் தற்காலிக கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு வரலாற்று சதத்தை அடித்து, 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்ததற்கான முக்கிய காரணமாக அமைந்தது.
முன்னதாக, வார்ம்-அப்பின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை மந்தனா ஏற்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author