மொகரம் பண்டிகை… கூட்ட நெரிசலில் அக்னி குண்டத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!! 

Estimated read time 0 min read

கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் அருகே மொகரம் கொண்டாட்டத்தின்போது அக்னி குண்டத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கர்நாடகாவில் ராய்ச்சூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு மொகரம் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அக்னி குண்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெடிசலில் ஒருவர் எதிர்பாராத விதமாக அக்னி குண்டத்தில் விழுந்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author