ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, இது அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, கவர்ச்சி மற்றும் உயிர்ச்சக்தியைப் பிரதிபலிக்கிறது என்று இலங்கையின் சர்வதேச விவகார நிபுணரும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்முயற்சியின் இலங்கை நிறுவன இயக்குநருமான யசிரு ரணராஜா கூறினார்.
இதுகுறித்து அவர் அண்மையில் சின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பான SCO, பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சமமான உரையாடல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு நம்பகமான தளத்தை வழங்குகிறது. இது உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது, இது பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பில் பல நாடுகள் உரையாடல் கூட்டாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் சேர விரும்புவதை நாங்கள் காண்கிறோம், இந்த அமைப்பு சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது என்று ரணராஜா கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் கூட்டாளியாக இலங்கை உள்ளது. பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் துறைமுக ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இந்த அமைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளவும், SCOஇன் கீழ் பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு முயற்சிகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளவும் விரும்புகிறது என்று அவர் கூறினார்.