பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு.!

Estimated read time 0 min read

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த மழை வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 19,500 பேர் வெளியேற்றப்பட்டன, 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் மூழ்கி நாசமாகியது. குறிப்பாக, சட்லஜ், ரவி, மற்றும் பியாஸ் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாவட்டங்கள், குறிப்பாக பதான்கோட், ஹோஷியார்பூர், குருதாஸ்பூர், கபூர்தலா, ஃபாசில்கா, மற்றும் தர்ன் தரன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ளம் வீடுகள், வாகனங்கள், மற்றும் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்துள்ளன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author