சஹாரா குழுமம் மீது ரூ.1.74 லட்சம் கோடி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்  

Estimated read time 0 min read

சஹாரா குழுமத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை அதன் நிறுவனர் சுப்ரதா ராய், அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகை, ₹1.74 லட்சம் கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான நிதி மோசடி தொடர்பானது.
பல கோடி முதலீட்டாளர்களிடமிருந்து அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து பணத்தைச் சேகரித்து, அதைத் திருப்பித் தராததுதான் சஹாரா குழுமம் மீதான முக்கியக் குற்றச்சாட்டு ஆகும்.
சுப்ரதா ராயின் மனைவி சப்னா ராய் மற்றும் மகன் சுஷாந்தோ ராய் உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

You May Also Like

More From Author