சென்னையில்nபோக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும் போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. [மேலும்…]
அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
ஆப்பிரிக்கக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்வது, உங்கள் எண்ணங்களை மாற்றும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இது உங்களுக்குப் புதுப்புது பார்வைகளையும், நல்ல புரிதலையும் கொடுக்கும். [மேலும்…]
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) [மேலும்…]