சென்னையில்nபோக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும் போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை [மேலும்…]
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கோப்பை தொடர், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் உற்சாகமாக ஆரம்பமானது. மெக்சிகோ, கனடா [மேலும்…]
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [மேலும்…]
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க கூட்டணி ஆளும் [மேலும்…]
அரசியல் களத்தில் திமுக முற்றிலும் தனித்துவிடப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் அசாத்தியச் சொந்த பலம் தங்களுக்குக் கோட்பாட்டு ரீதியாக இருக்கிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் என 64 பேரை பணியிட மாற்றம் [மேலும்…]
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் [மேலும்…]