தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வங்கியில் வேலை தேடுகிறீர்களா? டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு நடத்தும் நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) காலி பணி இடங்கள்: 11,403 [மேலும்…]
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபாட்டில்கள் விற்பனை [மேலும்…]
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற [மேலும்…]
* இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் [மேலும்…]
இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால [மேலும்…]
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு, பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான அன்வர்தீன் [மேலும்…]