தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்பாடுகள் எனும் வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் [மேலும்…]
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், புதன்கிழமை (ஜூன் 17) தங்க விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், [மேலும்…]
தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’, தொடங்கியதில் இருந்தே பல்வேறு [மேலும்…]
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் [மேலும்…]
பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. [மேலும்…]
நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை [மேலும்…]