தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் [மேலும்…]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த முன்மொழிவில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது [மேலும்…]
புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் [மேலும்…]
சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வை மேம்படுத்துவதற்கான [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான அறிமுகக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் நாள் இந்தோனேசியாவின் [மேலும்…]