தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தற்போது சென்னைக்கு 990 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]
மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் [மேலும்…]
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி [மேலும்…]
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 25ஆம் நாள் முற்பகல் தொடங்கியது. Please follow [மேலும்…]
தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் [மேலும்…]
மோந்தா புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வலுக்கொண்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்திய [மேலும்…]
நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று [மேலும்…]