நேபாளத்தில் சுரங்கப்பாதையில் மீட்புப்பணிக்கான சவால்கள்

Estimated read time 1 min read

நேபாளத்துக்குச் சென்றடைந்த சீனத் தேசிய சுரங்க மீட்புதவி நிபுணர்களில் ஒருவர் சி.ஜி.டி.என். அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:

தற்போது நேபாளத்தில் மேற்கொண்டிருக்கின்ற மீட்புதவிப் பணி மூன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளது. முதலாவது, போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரிய இயந்திரங்களைக் கொண்டு செல்லவதில் தடை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது, சுரங்கப்பாதையில் அதிகப்படியான வண்டல் மண் படிந்துள்ளதால், மீட்புதவியாளர்கள் கடந்து செல்வது கடினமாக உள்ளது. மூன்றாவது, சுரங்கம் எண் 3-ஐத் தவிர, மற்ற அனைத்து சுரங்கங்களின் நுழைவாயில்களிலும் நுழைய முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், சீன நிபுணர் குழு, நேபாள இராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புப் படைகளுடன் இணைந்து தொடர்ந்து மீட்பு பணியை மேறஅகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author