இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.
இந்த அடுத்தகட்ட நடவடிக்கையானது, பயணிகள் பாதுகாப்பு, விபத்து தவிர்ப்பு, பாதசாரிகள் பாதுகாப்பு, மற்றும் விபத்துக்குப் பிந்தைய வெளியேற்றம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட “விபத்தின் முழுமையான சங்கிலித் தொடரையும்” மதிப்பீடு செய்யும்.
2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு
