இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது.
கடந்த சில மாதங்களாகவே வெயில் பாடாய்படுத்தி வந்த நேரத்தில், இந்த மழை சென்னைவாசிகளுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்
You May Also Like
“என் இதயம் நொறுங்கியுள்ளது” – கரூர் துயரத்தில் தளர்ந்த விஜய் இரங்கல்..!!!
September 28, 2025
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!!
November 20, 2025
