ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் தேதி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தாண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அதன் பின்னர், மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
You May Also Like
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2080 உயர்ந்தது..!!!
October 21, 2025
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
September 2, 2025
மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.5000 உயர்வு… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!
February 26, 2026
