78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தனது உரையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டைப் பிளவுபடுத்தும் சட்டங்களுக்கு நவீன சமூகத்தில் இடமில்லை என்றும் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
“உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி பலமுறை விவாதங்களை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாட்டின் பெரும் பகுதியினர், தற்போதைய சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம், ஒரு பாரபட்சமான சிவில் சட்டம் என்று உணர்கிறார்கள்.
அது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவு, அதை நிறைவேற்றுவது நமது கடமை.” என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.