ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையம் நவீன மயம்  

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.

புதிய திட்டத்தின்படி, 10 மாடிகள் கொண்ட புதிய வசதி, 1,100 பேருந்துகள் இயங்கும் பேருந்து நிலையம், கிட்டத்தட்ட 500 கார்கள் மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் ஒரு வணிக வளாகம் ஆகியவை ரூ.823 கோடியில் கட்டப்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்த திருத்தப்பட்ட திட்டத்தின்படி, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்துக்குச் சொந்தமான குறளகம் கட்டிடம், திட்டத்தின் ஆலோசகராக உள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் முன்மொழிந்துள்ள மல்டிமாடல் வசதி வளாகத்தின் (எம்எம்எப்சி) ஒரு பகுதியாக மாற்றப்படும்.

You May Also Like

More From Author