நவம்பர் 10-ம் தேதி பதவி விலகவுள்ள இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் என்றால் எப்போதும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நீதிபதிகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளை நம்பும்படி குடிமக்களை வலியுறுத்தினார்.
“நீங்கள் தேர்தல் பத்திரங்களைத் தீர்மானிக்கும்போது, நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருக்கிறீர்கள், ஆனால் அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால், நீங்கள் சுதந்திரமானவர் அல்ல.. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல” என்று அவர் கூறினார்.
நீதித்துறை சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக முடிவெடுப்பது அல்ல: தலைமை நீதிபதி சந்திரசூட்
