சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!! 

Estimated read time 0 min read

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.

எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விமானங்கள் திடீர் ரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

ஆனால் நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author