ஜூலை 21-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்!!

Estimated read time 0 min read

மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு இன்று அறிவித்ததாவது, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். மூன்று மாத இடைவேளைக்குப் பிறகு இரு சபைகளும் ஜூலை 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடவுள்ளன.

இந்த கூட்டத்தொடரின் தேதி குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் மந்திரிசபை நாடாளுமன்ற விவகாரக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில்தான் இந்த அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, ஓப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய பின்னணியில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த ரிஜிஜு, “மழைக்கால கூட்டத்தொடரின் விதிமுறைகளின்படி, எந்தவொரு விவகாரமும் விவாதிக்கலாம்” எனத் தெளிவுபடுத்தினார்.

எனவே, எதிர்க்கட்சிகள் விரும்பும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் கூட இந்த கூட்டத்தொடரில் சிந்திக்கப்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author