இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைக்கான உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்  

Estimated read time 0 min read

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், நாட்டில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், தகவல் தொடர்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு முக்கிய உரிமத்தைப் பெற்றுள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்டெல் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் நிறுவனத்திற்குப் பிறகு, மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இந்த உரிமத்தைப் பெற்றுள்ளது.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்டார்லிங்கின் நுழைவை உறுதிப்படுத்தினார்.
இது தொலைத்தொடர்பு பூங்கொத்தில் ஒரு புதிய மலர் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சேவை விரைவாக செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author