தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 27ம் தேதி வரை மழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! 

Estimated read time 0 min read

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று (ஜூன் 22) முதல் ஜூன் 27ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின் காரணமாக, தமிழகம் முழுவதும் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சாத்தியம் இருப்பதாகவும், மழை மிதமான அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், பிற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author